செங்கல்பட்டு: பட்டா மாறுதல் செய்ய 6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ, கிராம நிர்வாக உதவி அலுவலர் ஆகியோரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். கடந்த 2 மாதத்துக்கு முன், மேலமையூர் பகுதியில் வீட்டுமனை வாங்கினார். அந்த மனைக்கு பட்டா கேட்டு, கடந்த மாதம் மேலமையூர் விஏஓ செங்கல்பட்டு ஜெசிகே.நகரை சேர்ந்த சிவராமன் (46) என்பவரை அணுகினார். மனு கொடுத்த ஒரு வாரத்துக்கு மேல் ஆகியும் அவருக்கு பட்டா மாறுதல் செய்யவில்லை. இதையடுத்து மீண்டும் விஏஓவிடம், சென்று கேட்டார். அப்போது, பட்டா மாற்றம் செய்ய 6 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால், உடனே பட்டா மாறுதல் செய்யப்படும் என சிவராமன், அவரது உதவியாளர் மேலமையூரை சேர்ந்த முரளி கிருஷ்ணன் (40) ஆகியோர் கேட்டனர்.