டெல்லி :மலைத்தேன் உட்பட 35க்கும் மேற்பட்ட புதிய, பழங்குடியினச் சேகரிப்பு பொருள்கள் இந்தியப் பழங்குடியினக் கடைகளிலும், இணையதளத்திலும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தியப் பழங்குடியினர் சேகரிப்புப் பொருள்களை விற்பதற்காக ‘‘எங்கள் வீட்டிலிருந்து உங்கள் வீட்டுக்கு’’ என்ற எட்டாவது பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பிரசாரம் பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தியப் பழங்குடியினர் கூட்டுறவு சந்தை மேம்பாட்டுக் கூட்டமைப்பால் (டிரைபட்) எட்டு வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள பழங்குடியினர் சேகரிப்புப் பொருள்கள், பலருக்கும் கிடைக்கும்.