டெல்லி: அசாம், ஆந்திரா, பஞ்சாப் மற்றும் குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முன்னோட்டம் வெற்றி பெற்றுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடவடிக்கை டிசம்பர் 28, 29 அன்று அசாம், ஆந்திரா, குஜராத், பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களில் நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடவடிக்கை ஒவ்வொரு மாநிலத்தின் இரண்டு மாவட்டங்களில் திட்டமிடப்படும் என கூறியுள்ளது.