சென்னை: வங்கி கணக்கில் திடீரென தவறி பண பரிமாற்றம் நடந்துள்ளதாக குறுஞ்செய்தி அனுப்பி நூதன முறையில் பணத்தை பறிக்கும் கும்பலிடம் இருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக சென்னை போலீசார் வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில், திடீரென வங்கி கணக்கில் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது போன்று குறுஞ்செய்தி செல்போனுக்கு வந்தால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். குறுஞ்செய்தி வந்தவுடன் மர்மநபர் ஒருவர் தவறுதலாக உங்கள் வங்கி கணக்கிற்கு பணத்தை பரிமாற்றம் செய்ததாக கூறி குறுஞ்செய்தி மூலமாகவோ அல்லது வாட்ஸ் அப் மூலமாகவோ உரையாடல் நடத்தி மோசடி செய்வதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.