மைசூரு: சிக்கபள்ளாபுரா பத்திரிகையாளர் தற்கொலை முயற்சிக்கு காரணமான அமைச்சர் சுதாகர் உடனே தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் எம். லட்சுமண் வலியுறுத்தினார்.
மைசூருவில் இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, சிக்கபள்ளாபுரா மாவட்டத்தை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். தற்போது மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் டெத்நோட் எழுதி வைத்துள்ளார். அதில் அமைச்சர் சுதாகர் குறித்து செய்திகள் வெளியிட்ட காரணத்தால் போலீசார் மூலம் எனக்கு மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொந்தரவு கொடுத்து வருகிறார். இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன் என்றும் இதற்கு மாவட்ட எஸ்.பி.மிதுன், சப்-இன்ஸ்பெக்டர் பாபண்ணா ஆகியோர் உடந்தையாக உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.