புது டெல்லி: இந்திரா காந்தி டெல்லி மகளிர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (ஐ.ஜி.டி.டி.டபிள்யூ) பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் துணை முதல்வர் சிசோடியா கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
விழாவில் மொத்தம் 487 மாணவர்கள் பட்டம் பெற்றனர். பல்கலைக்கழகத்தின் இரண்டு மாணவர்கள் வேந்தர் விருதையும் 11 மாணவர்கள் துணைவேந்தர் விருதையும் பெற்றனர். ஒரு மாணவர் முன்மாதிரியான செயல்திறன் விருதையும் பெற்றார். பின்னர் நிகழ்ச்சியில் சிசோடியா உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: நமது பல்கலை கழகங்களில் பயிற்றுவிக்கப்பட்ட திறமைகளோடு உள்ள மாணவர்களை பெரும்பாலும் பன்னாட்டு நிறுவனங்களே பயன்படுத்திக்கொள்கின்றன. ஆனால், அதுபோன்ற நிறுவனங்களை மாணவர்கள் துவங்கி மற்றவர்களுக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் இடத்தை நோக்கி செல்வதற்கான நேரம் இது.