பெங்களூரு: இஸ்லாமியர்கள் குறித்து தவறான விமர்சனம் செய்ததாக அனந்தகுமார் ஹெக்டேவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முன்னாள் மத்திய அமைச்சரும், வடகனரா தொகுதி பாஜ எம்பியுமான அனந்தகுமாார் ஹெக்டே, கடந்த 2016ம் ஆண்டு வடகனரா மாவட்டம், சிர்சியில் நடந்த பாஜ பொதுக்கூட்டத்தில் பேசும்போது, இஸ்லாமியர்கள் உலகத்தின் வெடிகுண்டு போன்ற அபாயமானவர்கள் என்று பேசியதாகவும், அவரின் பேச்சு சிறுபான்ைம வகுப்பினரை காயப்படுத்தியுள்ளதால், அவர் மீது சட்டப்படி நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று முராஹி உசேன் என்பவர் பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அம்மனு நீதிபதி தியாகராஜ் என்.இனவளி முன் நேற்று விசாரணைக்கு வந்தது.