அலகாபாத்: உத்தரப்பிரதேசத்தின் கொல்வாலியை சேர்ந்தவர் ஷிகா. இவர் ஈடா பகுதியை சேர்ந்த சல்மான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சல்மான் தங்களது மகளை கடத்தி திருமணம் செய்து கொண்டதாக ஷிகாவின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் சல்மானிடம் இருந்து ஷிகாவை பிரித்த போலீசார் அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் சல்மான் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதில் தனது மனைவியின் விருப்பத்திற்கு மாறாக அவரை தன்னிடம் இருந்து அவரது பெற்றோர் பிரித்து அழைத்து சென்றுவிட்டதாக கூறியிருந்தார்.