பெங்களூரு: டொயோடா மோட்டார்ஸ் கம்பெனி ஊழியர்கள் 50வது நாளாக நேற்று நிர்வாகத்திற்கு எதிராக ரத்த தானம் செய்ததன் மூலம் நூதன போராட்டம் நடத்தினர். பெங்களூரு அடுத்த பிடதி தொழிற்பேட்டை பகுதியில் இயங்கிவரும் டொயோடா ேமாட்டார்ஸ் கம்பெனி ஊழியர்கள், நிர்வாகத்தின் அடக்கு முறையை கண்டித்து கடந்த மாதம் 9ம் தேதியில் இருந்து வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். கம்பெனிக்கு எதிரில் உள்ள சாலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் ேபாராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக முதல்வர் எடியூரப்பா, துணைமுதல்வர் அஷ்வத் நாராயண், அமைச்சர்கள் ஜெகதீஷ்ஷெட்டர், சிவராம் ஹெப்பார் ஆகியோர் முன்னிலையில் நான்கு சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை.