திருச்சி: திருச்சியில் பாரதிய ஜனதா மகளிரணி அகில இந்திய தலைவர் வானதி சீனிவாசன் நேற்று அளித்த பேட்டி: தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் இதுவரை நடத்தப்படவில்லை. எனவே தான் முதல்வர் வேட்பாளரை பாஜகவின் தேசிய தலைமை அறிவிக்கும் என கூற வேண்டியுள்ளது. முதலில் கூட்டம் நடத்த வேண்டும். வரும் தேர்தலில் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெற்று பேரவையில் இடம் பெற தமிழக பாஜக விரும்புகிறது.