புதுடெல்லி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,273 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 1 லட்சத்து 69,118 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 251 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 47,343 ஆக உயர்ந்துள்ளது.