ராஜபாளையம்: ராஜபாளையம் புதிய பஸ்நிலையம் அருகே அரசு பஸ், டூவீலர் மீது மோதியதில் தந்தை, மகள், மகன் பலியாயினர்.விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே செந்தட்டியாபுரம் பகுதியை சேர்ந்தவர் குருசாமி மகன் கணபதி(36). பில்டிங் கான்ட்ராக்டர். மகன் கமலேஷ்(9), மகள் குஷிகா(7). இருவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.இதனால் ராஜபாளையத்தில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்காக டூவீலரில் கணபதி நேற்று அழைத்து வந்தார். சிகிச்சை முடிந்து செந்தட்டியபுரம் சென்று கொண்டிருந்தபோது புதிய பஸ் நிலையம் அருகே சேலம் செல்லும் அரசு பஸ், டூவீலர் மீது மோதியது.