ஆவடி: திருமுல்லைவாயல் சோழம்பேடு சாலை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார்(35). இவர், ஆடுகளை வளர்த்து விற்பனை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சதீஷ்குமார், வீட்டில் உள்ள பட்டியலில் 9 ஆடுகளை அடைத்து வைத்திருந்தார். பின்னர், நேற்று காலை அவர் எழுந்து வந்து ஆடுகளை பார்த்துள்ளார். அப்போது, அங்கு இருந்த 4 ஆடுகள் திருட்டு போயிருந்தது. நள்ளிரவில் மர்ம நபர்கள் பட்டியலை திறந்து ஆடுகளை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.