டெல்லி : முன்னாள் பிரதமர் பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு, புதுடெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று மரியாதை செலுத்தினார்டிவிட்டரில் மத்திய உள்துறை அமைச்சர் விடுத்துள்ள செய்தியில், “மிகவும் மதிப்பிற்குரிய பாரத் ரத்னா அடல் ஜியின் பிறந்த நாளில், சதைவா அடல் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினேன். அடல் ஜியின் எண்ணங்களும் நாட்டின் முன்னேற்றத்திற்கான அவரது அர்ப்பணிப்பும் எப்போதும் நாட்டுக்குச் சேவை செய்ய நமக்கு பலத்தைத் தரும்’’ என கூறியுள்ளார்.