சிவகங்கை: சிவகங்கை டவுன் பிளானிங் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். துணை இயக்குநர் அறையில் இருந்து ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நகர் ஊரமைப்பு (டவுன் பிளானிங்) அலுவலகம் உள்ளது. சிவகங்கை மாவட்ட ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் வீடுகள், கட்டிடங்கள் கட்ட இங்குதான் தடையில்லா சான்றிதழ் வாங்க வேண்டும். இங்கு தடையில்லா சான்று வழங்க லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து நேற்று பிற்பகல் 3 மணியளவில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.