சென்னை: சாதி மத வெறியர்களால் நேரடியாக எதுவும் செய்ய முடியாது என்பதால், நடிகர்களை இறக்கி விட்டு காலூன்ற பார்க்கிறார்கள் என்று திருமாவளவன் கூறினார். சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடந்த விருது வழங்கும் விழாவில் பெரியார் பன்னாட்டு அமைப்பினர் அமெரிக்காவில் இருந்து காணொலி வாயிலாக கலந்துகொண்டு உரையாற்றினர். இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மற்றும் மருத்துவர் மீனாம்பாள் ஆகியோர் ”சமூக நீதிக்கான கி.வீரமணி விருதையும்” ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையும் திருமாவளவனுக்கு வழங்கினர். நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விசிக வன்னியரசு, துணை பொது செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விருது பெற்ற திருமாவளவன் பேசியதாவது: