தஞ்சை :இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தஞ்சையில் அளித்த பேட்டி: டெல்லியில் விவசாயிகள் 4வது வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை அழைத்து பேசாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை பிளவுபடுத்தும் சூழ்ச்சியை மத்திய அரசு செயல்படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழக முதல்வர், இச்சட்டத்திற்கு பாதிப்பு இல்லை என திரும்ப திரும்ப கூறுவதை நிறுத்த வேண்டும். மத்திய அரசை ஆதரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் தமிழக முதல்வர் இருக்கிறார் என்பதை அனைவராலும் உணர்ந்து கொள்ள முடிகிறது. வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி தஞ்சையில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வரும் 29ம்தேதி பேரணி மற்றும் மாநாடு நடைபெற உள்ளது.