காங்கிரஸ் நிறுவன நாள் விழா சிறப்பான முறையில் நிகழ்ச்சி கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவன நாள் விழாவை டிச. 28ம் தேதி, மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்று காலை மாவட்டத்தில் காந்தி சிலை இருக்கும் முக்கிய பகுதிகளின் அருகில் உள்ள இடத்தில் புதிய கம்பத்தில் காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்து, அதனை தொடர்ந்து 136வது நிறுவன நாளை நினைவுகூரும் வகையில் காங்கிரசார் 136 காங்கிரஸ் கொடிகளை ஏந்தி, தலையில் காந்தி குல்லா அணிந்து ஊர்வலமாக நடந்து சென்று காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய வேண்டும். அதே நாளில் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் காலை 9.30 மணி அளவில் 150 அடி உயர கம்பத்தில் காங்கிரஸ் கொடியை ஏற்றி சிறப்புரை நிகழ்த்த இருக்கிறேன். சேவா தள அணிவகுப்பும் அங்கே நடைபெறும். அதனை தொடர்ந்து உறுதிமொழி எடுக்கப்படும். அந்நாளில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் கொடி ஊர்வலத்தைச் சிறப்பாக நடத்த வேண்டும்.

Related Stories: