புதுடெல்லி: அடுத்த ஐந்து ஆண்டுகளில் 4 கோடி எஸ்.சி. மாணவர்களின் மேற்படிப்பிற்காக ரூ. 59,000 கோடி கல்வி உதவித்தொகை ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில், அடுத்த 5 ஆண்டுகளில் 4 கோடி எஸ்சி மாணவர்களின் மேற்படிப்பிற்காக ரூ.59,000 கோடி கல்வித் தொகை ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில், 60 சதவீதமான ரூ.35,534 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும்.