அலங்காநல்லூர்: மதுரை அலங்காநல்லூர் அருகே நேற்று நடந்த விவசாயிகள் உண்ணாவிரத நிகழ்ச்சியில் தமிழக பாஜ துணைத்தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் ‘‘மது விற்பனை மூலம் கோடி, கோடியாக லாபம் சம்பாதிக்கும் அதிகாரிகள், நீர்மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஒரு நாள் மழைக்கே நிரம்பும் சாத்தியார் அணை, இப்போது 3 மாதம் மழை பெய்தும் நிரம்பவில்லை. இதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம்.