திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ள அமைச்சர்களின் ஊழல் பட்டியல் விசாரணைக்கு பாஜ வலியுறுத்தும்: அண்ணாமலை மீண்டும் அதிரடி

அலங்காநல்லூர்: மதுரை அலங்காநல்லூர் அருகே நேற்று நடந்த விவசாயிகள் உண்ணாவிரத நிகழ்ச்சியில் தமிழக பாஜ துணைத்தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் ‘‘மது விற்பனை மூலம் கோடி, கோடியாக லாபம் சம்பாதிக்கும் அதிகாரிகள், நீர்மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஒரு நாள் மழைக்கே நிரம்பும் சாத்தியார் அணை, இப்போது 3 மாதம் மழை பெய்தும் நிரம்பவில்லை. இதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம்.

இந்தத்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை நேற்று கவர்னரிடம் கொடுத்து  விசாரிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். இந்த பட்டியலில் உண்மை இருந்தால், ஊழல் குறித்து விசாரிக்க பாஜவும் வலியுறுத்தும்’’ என்று தெரிவித்தார்.விவசாயிகள் வெளியேறினர்: பந்தலில், பாஜவினர் கட்சிக்கொடி, பேனர்களை கட்டியதால் விவசாயிகள் வெளியேறினர்.

Related Stories: