செய்யூர்: தச்சூர் கிராமத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க சிசிடிவி கேமராக்களை, எஸ்பி கண்ணன் இயக்கி வைத்தார்.மதுராந்தகம் ஒன்றியத்தில் முன்மாதிரி ஊராட்சியான தச்சூரில் சகாய நகர், எல்.என். புரம், செட்டிமேடு, இருசமநல்லூர் ஆகிய பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் அதிகளவில் கொள்ைள, வழிப்பறி, திருட்டு, விபத்து உள்பட பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இரவு நேரங்களில், மர்மநபர்கள் சுற்றி திரிவதால், பொதுமக்கள் வெளியே செல்ல அச்சமடைந்துள்ளனர். இதனால், இப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதே நேரத்தில், மேற்கண்ட பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுவதால், அவர்களுக்கு செல்போன் நெட்வொர்க் சரிவர கிடைப்பதில்லை என கூறப்பட்டது.