சென்னை: 20 சதவீத இடஒதுக்கீடு கோரி அடுத்தகட்ட போராட்டம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த 1ம் தேதி முதல்கட்ட போராட்டம் அறிவிக்கப்பட்டு அறவழியில் போராடத் தொடங்கினோம்.