தாராபுரம்: தாராபுரம் உப்பாறு அணைக்கு பரம்பிக்குளம் ஆழியாறு அணையிலிருந்து பாசன நீரை விடுவிக்கக்கோரி உப்பாறு பாசன விவசாயிகளும் திருப்பூர் மாவட்ட உப்பாறு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினரும் கடந்த 10 நாட்களாக உப்பாறு அணை அருகே காலவரையற்ற காத்திருப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 11வது நாளான நேற்று சங்கத்தின் தலைவர் அர்ஜூனன் தலைமையில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சிவகுமார் முருகானந்தம் முன்னிலையில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தின்போது தொப்பம்பட்டி ஊராட்சியின் முன்னாள் தலைவர் சண்முகம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேரில் வந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினர்.