பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.வுக்கு 2 ஆண்டு சிறை

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா நல்லாம்பட்டியை சேர்ந்தவர் சிவமூர்த்தி (50). இவரிடம் பட்டா பெயர் மாறுதலுக்காக 2013, செப்டம்பர் 24ம் தேதி நல்லாம்பட்டி கிராம நிர்வாக அதிகாரியாக இருந்த அரச்சாலகுமார் (36) 2,900 லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டார்.   இந்த வழக்கை ஈரோடு தலைமை ஜூடீசியல் மாஜிஸ்திரேட் ஜோதி விசாரித்து, அரச்சாலகுமாருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

Related Stories: