டெல்லி: வேறு அமைப்புகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்துவதை நிறுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். வேளாண் சட்டங்கள் தொடர்பான மத்திய அரசின் அனைத்து பரிந்துரைகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் போராட்டத்தை திசை திருப்பும் வகையில் வேறு அமைப்புகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்துவதை நிறுத்த வேண்டும் டெல்லியில் போராடி வரும் விவசாய அமைப்புகள் மத்திய அரசுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.