புதுடெல்லி: கொரோனா பரவல் காரணமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை இந்த ஆண்டு மத்திய அரசு ரத்து செய்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு இடையே சமூக இடைவெளியுடன் மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. 18 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டு இருந்த இது, கொரோனா தொற்று காரணமாக 8 நாட்களில் முடிக்கப்பட்டது. இந்நிலையில், விவசாயிகள் போராட்டம், வேளாண் சீர்திருத்த சட்டங்கள் பற்றி விவாதிப்பதற்காக நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரை கூட்டும்படி, சில தினங்களுக்கு முன்காங்கிரஸ் மக்களவை கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கடிதம் எழுதினார். இதற்கு கடந்த 14ம் தேதி ஜோஷி எழுதியுள்ள பதிலில், ‘டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் தற்போதைய ஆபத்தான சூழலில் நவம்பர் இறுதி வாரம் தொடங்க வேண்டிய, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இந்தா்ண்டு நடைபெறாது.