கொரோனா தடுப்பூசி,விவசாயிகள் போராட்டம் குறித்து முக்கிய ஆலோசனை: பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்.!!!

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.  மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த 20 நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் நாளை (டிச. 16) பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற உள்ளது.இந்தக் கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி நிலை மற்றும் விநியோகம், விவசாயிகள் போராட்டம், நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆகியவற்றைக் குறித்து விவாதிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Stories: