புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த 20 நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர்.