சென்னை: மாமனிதன் படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியது. கிளாப் நிறுவன ஒப்பந்தத்திற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளருமான யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். தங்களுக்கு உரிய விநியோக உரிமை தரவில்லை எனவும் படத்திற்கு தடை கோரியும் அபிராமி மெகா மால் வழக்கு தொடர்ந்துள்ளது.