மதுரை : மதுவிற்பனை என்பதே கொள்ளை அடிப்பதற்கு சமம் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தஞ்சையைச் சேர்ந்த ராஜேஸ்வரி ப்ரியா உயர்நீதிமன்றக் கிளையில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளில் நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் விலைக்கு மது விற்பனையை தடுக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, பெரும்பாலனவர்கள் கொள்ளையடித்த பணத்தை கொண்டே மது வாங்க வருகிறார்கள்.மதுவை கூடுதல் விலைக்கு விற்பது, மது வாங்க வருவோரிடமும் கொள்ளையடிப்பது போல் உள்ளது, என கருத்து தெரிவித்தனர்.