கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் இந்தியா முன்னிலை வகிக்கும்: தெலங்கானா ஆளுநர் தமிழிசை பேட்டி

சென்னை: தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் காஞ்சிபுரத்தில் நேற்று பல்வேறு கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொரோனா தடுப்பூசியை தயாரிப்பதிலும், விற்பனை செய்வதிலும் பல நாடுகள் ஆர்வமாக உள்ளன. ஆனால் இந்தியாவே எல்லாவற்றுக்கும் தலைமை தாங்கும் வகையில் இருந்து வருகிறது. தடுப்பூசியை தேவையான எண்ணிக்கையில் உற்பத்தி செய்யும் சக்தி இந்தியாவில் மட்டுமே உள்ளது என ஆஸ்திரேலிய  நிறுவனம் கூறியுள்ளது. தடுப்பூசியை கண்டறிவது மிக முக்கியம் என்றாலும் பாதுகாப்பு மற்றும் நோய்த்தடுப்பு முறைகள் பற்றிய அனைத்து விபரங்களையும் நாம் தெரிந்து வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும்.

Related Stories: