ஜேகே டயர் தேசிய கார் பந்தயம் அஸ்வின், அமீர் அசத்தல்

கோவை: ஜேகே டயர் எப்எம்எஸ்சிஐ 23வது தேசிய சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தின் எப்எல்ஜிபி4 பந்தயத்தில் அஸ்வின் தத்தா மற்றும் நோவிஸ் கோப்பை போட்டியில் அமீர் சையது சாம்பியன் பட்டம் வென்றனர். செட்டிபாளையம், காரி மோட்டார் ஸ்பீட்வேயில் நடந்த பந்தயங்களில் கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த 16 வயது அமீர் சையது நோவிஸ் கோப்பைக்கான போட்டியில் அனைத்து சுற்றுகளிலும் தனது திறமையை திறம்பட வெளிப்படுத்தி அசத்தினார். அவர் 2 பந்தயங்களில் வெற்றி பெற்று பார்வையாளர்களின் பாராட்டை அள்ளினார். பார்முலா எல்ஜிபி4 போட்டியில் டார்க் டான் ரேசிங்கை சேர்ந்த அஸ்வின் தத்தா வெற்றி பெற்றார். சென்னையைச் சேர்ந்த அஸ்வின் கூறுகையில்,  ‘முதல் பந்தயத்தில் நான் மெதுவாக இருந்தேன், ஆனால் எனது வேகம் குறித்து எனக்கு போதுமான நம்பிக்கை இருந்தது. ‘சேப்டி கார்’ மூலம் இந்த வெற்றியை பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார். இந்த போட்டியில் விஷ்ணு பிரசாத் 2வது இடம், சரோஷ் ஹடாரியா 3வது இடம் பிடித்தனர்.

Related Stories: