நீடாமங்கலம்: நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய வளாகத்தில் சாகுபடி செய்துள்ள இளம் பயிர்கள் மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் 15 ஏக்கர் அழுகி வருகிறது. திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய வளாகத்தில் நடவு செய்த இளம் நெற்பயிர்கள், தீவனப்பயிர்கள், பயிர் மாதிரிகள், புது ரக நெல் வகைகள், வரும் பருவ ஆண்டிற்கான ஆராய்ச்சி பயிர் வகைகள், மீன் குட்டை உள்ளிட்ட 15 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் நிவர் புயல் எதிரொலியால் பெய்த மழையில் அனைத்து பயிர் வகைகளும் நீரில் மூழ்கியது. அதனைத்தொடர்ந்து புரெவி புயலால் பெய்த தொடர்மழையில் 10 நாட்களாக வடிகால் வசதியில்லாமல் 15 ஏக்கர் சாகுபடி செய்துள்ள பயிர்கள் நீரில் மூழ்கி வயல்கள் குளம்போல் காட்சியளிக்கிறது.
\