'காலநிலை மாற்றத்துக்கு இந்தியா பொறுப்பல்ல': மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்..!!

டெல்லி: காலநிலை மாற்றத்துக்கு இந்தியா பொறுப்பல்ல என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜவடேகர், காலநிலை மாற்றம் என்பது ஒரே இரவில் ஏற்படக்கூடியது அல்ல. கடந்த 100 ஆண்டுகளாக காலநிலை மாற்றம் ஏற்பட்டு வருகிறது என குறிப்பிட்டார். வரலாற்றுபூர்வமாக மாசு வெளியேற அமெரிக்கா 25%, ஐரோப்பா 22%, சீனா 13% பொறுப்பு. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் இருந்து வெளியேறும் மாசு 3% மட்டுமே என தெரிவித்தார்.

Related Stories: