ஜார்கண்ட், : இளம்பெண்ணை 17 பேர் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜார்க்ண்ட் மாநிலம் டும்கா பகுதியை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள மார்க்கெட்டுக்கு சென்றார். அங்கு காய்கறிகளை வாங்கி விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில் 17 பேர் கொண்ட கும்பல் அவரை, கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது.