திருவனந்தபுரம்: கேரளாவில் வீட்டு வாசலில் முதலை வந்தது பெரும் பீதியை ஏற்படுத்தியது. கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளியில் பிரசித்திபெற்ற நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிவது உண்டு. ‘செம்பருத்தி’, ‘ராவணன்’, ‘புன்னகை மன்னன்’ உட்பட பல திரைப்படங்களின் படப்பிடிப்புகளும் இங்கு நடந்துள்ளன. இந்த அருவியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் ஷாபு என்பவரின் வீடு உள்ளது. இந்நிலையில், நேற்று அதிகாலை வீட்டின் முன் வினோத சத்தம் கேட்டது. சாபியா கதவை திறந்து பார்த்தார். அப்போது, வீட்டு முற்றத்தில் மெகா சைஸ் முதலை இருந்தது தெரிய வந்தது. பயத்தில் அலறியடித்து வீட்டுக்குள் ஓடி கணவரிடம் கூறினார். ஷாபு வெளியே வந்து முதலையை விரட்ட பார்த்தார்.