வாஷிங்டன்: ஏலியன்களுடன் அமெரிக்க அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாக இஸ்ரேல் முன்னாள் விஞ்ஞானி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். ஏலியன்கள் எனப்படும் வேற்று கிரகவாசிகள் குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றது. ஆனால், ஏலியன்கள் இருக்கிறார்கள் என்பது இன்னும் உறுதி செய்யப்படாத ஒன்றாக இருந்து வருகின்றது. இஸ்ரேலை சேர்ந்த முன்னாள் விண்வெளி பாதுகாப்பு துறை தலைவர் ஹெய்ம் எஸ்ஹெட்(87) பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது: ஏலியன்கள் இருப்பது உண்மைதான். அமெரிக்க அதிபராக இருந்த டிரம்புக்கு இது தெரியும். ஏலியன்களின் கேலக்டிக் கூட்டமைப்புடன் அமெரிக்க அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.