அமெரிக்கா பற்றி விஞ்ஞானி அதிர்ச்சி தகவல் ஏலியன்களுடன் ரகசிய ஒப்பந்தம்: டிரம்ப்புக்கு எல்லாம் தெரியும்

வாஷிங்டன்: ஏலியன்களுடன் அமெரிக்க அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாக இஸ்ரேல் முன்னாள் விஞ்ஞானி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். ஏலியன்கள் எனப்படும் வேற்று கிரகவாசிகள் குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றது. ஆனால், ஏலியன்கள் இருக்கிறார்கள் என்பது இன்னும் உறுதி செய்யப்படாத ஒன்றாக இருந்து வருகின்றது. இஸ்ரேலை சேர்ந்த முன்னாள் விண்வெளி பாதுகாப்பு துறை தலைவர் ஹெய்ம் எஸ்ஹெட்(87) பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது: ஏலியன்கள் இருப்பது உண்மைதான். அமெரிக்க அதிபராக இருந்த டிரம்புக்கு இது தெரியும். ஏலியன்களின் கேலக்டிக் கூட்டமைப்புடன் அமெரிக்க அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

பூமியின் தன்மை குறித்து ஆய்வு செய்து அறிந்து கொள்வதற்காக ஏலியன்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தி உள்ளனர். மனிதர்கள் ஏலியன்களை எதிர்கொள்வதற்கு தயாராக இல்லை என்பதால் அவர்கள் தங்களது இருப்பை ரகசியமாக வைத்திருக்கின்றனர். ஏலியன்களுடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில் செவ்வாய் கிரகத்தில் நிலத்தடி ரகசிய மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஏலியன்களை ஏற்றுக்கொள்வதற்கு மனிதர்கள் தயாராகவில்லை என ஏலியன்கள் கூட்டமைப்பு தெரிவித்ததால் தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏலியன்கள் குறித்த தகவலை வெளியிடாமல் மறைத்து விட்டார்.

Related Stories: