விண்கல்லின் மாதிரியை பூமிக்கு எடுத்து வரும் திட்டத்தை ஜப்பான் வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்கிறது.கடந்த 2014 ஆம் ஆண்டு இதற்காக ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி மையம் ஹயபுசா 2 என்ற விண்கலம் ஒன்றை, ரியுகு (( ryugu ))என்ற விண்கல்லுக்கு அனுப்பியது.கிட்டத்தட்ட அரை மைல் அகலம் கொண்ட அந்த கல், சூரியனில் இருந்து 21 கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பிப்ரவரி மாதம் விண்கலம் அந்த விண்கல்லில் தரையிறங்கி அதன் மேற்பரப்பை 2 மாதங்கள் ஆய்வு செய்தது.