வேலூர்: வேலூர் அருகே ஊசூரில் சிறை வார்டன் உள்பட 3 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டம் அரியூர் அடுத்த புலிமேடு பகுதியை சேர்ந்தவர் அசோக். இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மர்மநபர்களால் வெட்டிக்கொள்ளப்பட்டார். இவரது நண்பர் காமேஷ், புழல் சிறையில் வார்டனாக உள்ள தணிகைவேல் மற்றும் சுதாகர் ஆகிய 3 பேரும் சேர்ந்து நண்பரை கொலை செய்த்தவர்களை பழிக்கு பழி வாங்க வேண்டும் என்று திட்டம் திட்டியுள்ளனர். இந்த தகவல் ஏற்கனவே கொலை செய்த கும்பலுக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில் நேற்று மூவரும் புலிமேடு அருகே மது அருந்திக்கொண்டிருந்த போது காரில் வந்த மர்மநபர்கள் புழல் சிறையில் வார்டனாக உள்ள தணிகைவேல் மற்றும் சுதாகர் ஆகியோரை சம்பவ இடத்திலேயே வெட்டி படுகொலை செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்து தப்ப முயன்ற காமேஷ் என்பவரையும் விரட்டி சென்று படுகொலை செய்துள்ளனர்.