லக்னோ:மிரட்டி பணம் பறித்தல், கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள ஐபிஎஸ் அதிகாரி ‘தலைக்கு’ ரூ.50,000 பரிசுத் தொகையை உத்தரபிரதேச போலீசார் அறிவித்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் மஹோபா மாவட்ட போலீஸ் எஸ்பி மணிலால் பட்டிதர், கப்ராய் நகரில் வசிக்கும் இந்திரகாந்த் திரிபாதி என்பவரிடம் லஞ்சம் கேட்ட வீடியோ கடந்த செப். 7 அன்று சமூக ஊடகங்களில் வைரலாகியது. இந்த வீடியோ வைரலாகிய இரண்டாவது நாளான செப். 8ம் தேதி இந்திரகாந்த் திரிபாதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில், தொழிலதிபர் இந்திர காந்தின் சகோதரர் ரவிகாந்த் திரிபாதி கொடுத்த புகாரின்படி, அப்போதைய எஸ்பி மணிலால் பட்டிதர் இடைநீக்கமும், போலீசார் தேவேந்திர குமார் சுக்லா மற்றும் அருண்குமார் யாதவ் ஆகியோர் பணிநீக்கமும் செய்யப்பட்டனர்.