திருவள்ளூர்: டெல்லியில் அடக்கு முறைக்கு அஞ்சாமல் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ள மத்திய அரசு மற்றும் அதற்கு துணை போகும் மாநில அரசை கண்டித்தும் திருவள்ளூரில் மத்திய, மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் ஆவடி சா.மு.நாசர், திருத்தணி எம்.பூபதி ஆகியோர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்எல்ஏக்கள் ஆ.கிருஷ்ணசாமி, வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கே.திராவிட பக்தன், ஆர்.டி.இ.ஆதிசேஷன், சி.ஜெரால்டு, ஒ.ஏ.நாகலிங்கம், காயத்ரி ஸ்ரீதரன், கே.சத்யராஜ், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் சி.சு.ரவிச்சந்திரன், கூளூர் எம்.ராஜேந்திரன், பூவை எம்.ஜெயக்குமார், டி.தேசிங்கு, மோ.ரமேஷ், பூவை எம்.ரவிக்குமார், என்.இ.கே.மூர்த்தி, கே.அரிகிருஷ்ணன், ச.மகாலிங்கம், டி.கிரிஸ்டி, தி.வே.முனுசாமி, தி.வை.ரவி, ஆரத்தி ரவி, சண்முகம், பழனி, ரவீந்திரா மற்றும் எம்.பன்னீர்செல்வம், ஈக்காடு கே.முகமது ரபிக், அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.