புயலால் பாதித்துள்ள மக்களுக்கு பாஜவினர் உதவ வேண்டும்: எல்.முருகன் வேண்டுகோள்

சென்னை: அடுத்தடுத்த புயலில் பாதித்த மக்களுக்கு உதவும் வகையில் பாஜ தொண்டர்கள் நிவாரணப் பணியில் ஈடுபட வேண்டும் என தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:   தென் தமிழகமானது நிவர் புயல் தொடங்கி அடுத்தடுத்து மழையால் பாதிப்பு அடைந்து வருகிறது. கடலூர், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருநெல்வேலி, கும்பகோணம் மற்றும் இன்னும் சில பகுதிகளில் பலத்த மழையால் வீட்டுச் சுவர் இடிந்து மக்கள் உயிரிழந்துள்ளார்கள். மத்திய, மாநில அரசுகள் மீட்புப் பணியில் தங்களை முழுவதுமாக ஈடுபடுத்திகொண்டுள்ள இந்த கடினமான சூழலில், நாம் அனைவரும் அவர்களோடு ஒன்றிணைந்து, நம்மால் இயன்ற உதவிகளை செய்து மழை வெள்ள பாதிப்பிலிருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும். பாதித்தவர்களுக்கு உடனடியாக உதவி செய்வதோடு, நம் கட்சி தொண்டர்கள், தலைவர்கள் என அனைவரும் மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

Related Stories: