பிரதமர் மோடி, அமைச்சர்களின் இந்தி பேச்சுக்கு திமுக எம்.பிக்கள் கண்டனம்

சென்னை: பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள்  இந்தியில் பேசுவதற்கு திமுக எம்.பிக்கள் டி.ஆர் பாலு, திருச்சி சிவா கண்டனம் தெரிவித்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மோடி தலைமையிலான அனைத்து கட்சி காணொலி கூட்டம் நடந்தது. அதில் அமைச்சர் பியூஷ்கோயல் இந்தியில் பேசுவதை சுட்டிகாட்டி திமுக எம்.பி டி.ஆர்.பாலு அமைச்சர் ஆங்கிலத்தில் பேச வேண்டும் சத்தம் போட்டார். அதை தொடர்ந்து அனைத்து கட்சி பிரதிநிதிகள் பேசி முடித்தபின் காணொலி கூட்டத்தில் பிரதமர் மோடி நிறைவுரை ஆற்றினார்.

பிரதமர் மோடியும் தனது உரையை இந்தியில் நிகழ்த்தும்போது மற்ற மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் அமைதியாக இருந்த நிலையில் திருச்சி சிவா குறுக்கிட்டு அமைச்சர்கள் இந்தியில் பேசுவதை நாங்கள் எதிர்த்த நிலையில் பிரதமரே தனது உரையை இந்தியில் நிகழ்த்துவது கடுமையான கண்டனத்திற்கு உரியது. பிரதமர் தனது உரையை எங்களுக்கும் புரியும் வண்ணம் தனது உரையை ஆங்கிலத்தில் நிகழ்த்தி இருக்க வேண்டும் அல்லது ஆங்கில மொழி பெயர்ப்பாளர் மூலமாக மற்றவர்க்கு புரியும் படி ஏற்பாடு செய்து இருக்க வேண்டும் என்று கூறினார்.  பிரதமர் மோடி ஒரு சில நிமிடங்கள் அமைதி காத்து பிறகு உரையை முடித்தார்.

Related Stories: