புதுடெல்லி: சர்வதேச போலீஸ் என அழைக்கப்படும் இன்டர்போல் அமைப்பு, மக்களின் பொது பாதுகாப்புக்கு தீவிரமான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிகழ்வு, தனிநபர், பொருள் ஆகியவற்றை பற்றி எச்சரிக்க, ஆரஞ்சு நோட்டீஸ் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது. இந்நிலையில், இந்த அமைப்பு கடந்த புதன்கிழமை 194 நாடுகளுக்கு ஆரஞ்சு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், `கோவிட்-19 மற்றும் காய்ச்சலுக்கான போலி தடுப்பூசிகள் தவறான முறையில், சட்ட விரோத விளம்பரம் மூலமாக விற்கப்படுகின்றன.