டெல்லி: பாம்பனுக்கு மிக அருகில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது என இந்திய வானி்லை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரியில் இருந்து 230 கி.மீ. தொலைவில் புரெவி புயல் உள்ளதாகவும் கூறியுள்ளது. கரையை நோக்கி மணிக்கு 16 கீ.மீ. வேகத்தில் புரெவி புயல் நகர்ந்து வருகிறது. தமிழகத்தின் தென் கடலோர பகுதிகளான பாம்பன்-கன்னியாகுமரி இடையே இன்றிரவு அல்லது நாளை அதிகாலை புரெவி புயல் கரையை கடக்கும் என தெரிவித்துள்ளது. அடுத்த 3 மணி நேரத்தில் பாம்பன் பகுதியை கடந்து செல்லும் போது 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் தற்போது 70-80 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதாகவும் தெரிவித்துள்ளது.