மதுரை: தமிழகத்தில் எதன் அடிப்படையில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன என தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. அரசியலில் உள்ள அதிகாரமிக்க நபர்களின் ஆசைக்காக புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகிறதா? எனவும் கேள்வி எழுப்பியது. புதிதாக உருவாக்கப்படும் மாவட்டத்திற்கு 2 அல்லது 3 எம்.எல்.ஏ.க்கள் இருந்தால் போதுமா எனவும் கேட்டுள்ளது. தென்காசி அரசு மருத்துவமனை அருகே ஆட்சியர் அலுவலகம் கட்ட தடைகோரி வழக்கில் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. புதிய மாவட்டங்களை உருவாக்கும் போது சீரான எல்லை, வழிமுறைகள் பின்பற்ற வேண்டாமா என தமிழக அரசிடம் ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியது. தென்காசி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் எதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டது என நீதிபதி கேட்டார்.