புதுடெல்லி: கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு டெல்லி-என்சிஆர் மட்டுமின்றி நாடு முழுவதிலும் உள்ள காற்றின் தரம் மோசமாக உள்ள நகரங்களில் பட்டாசுகளை வெடிக்க முழு தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி என்சிஆரில் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளதால் பட்டாசுகளை வெடிக்க தடை விதிப்பது பற்றி தாமாக முன்வந்து தேசிய பசுமை தீர்ப்பாயம்(என்ஜிடி) வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கின் நேற்றைய விசாரணையின் போது என்ஜிடி நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்ததாவது: காற்றின்தரம் “மோசம்” மற்றும் அதற்கு மேல் உள்ள டெல்லி என்சிஆர் மற்றும் நாட்டின் முக்கிய நகரங்களில் பட்டாசுகளை பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் முழு தடை விதிக்கப்படுகிறது.