மதுரை: ஆற்றை மாசுபடுத்துவோரை ஏன் குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கூடாது என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பி உள்ளது. ஐகோர்ட் மதுரை கிளை பதிவாளர் (நீதித்துறை) தரப்பில் தாமாக முன்வந்து தாக்கல் ெசய்யப்பட்ட மனுவில், கரூர் மாவட்டத்திலுள்ள சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கலப்பதால் அமராவதி ஆறு மாசடைந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு தொழிற்சாலைகளின் கழிவுநீரும் இந்த ஆற்றில்தான் சேருகிறது. ஆறு மாசடைவதால் விவசாயமும், விவசாயிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, அமராவதி ஆற்றில் சாய கழிவுநீர் கலப்பதை தடுத்து, பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.