சென்னை:சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர் கவுதம் கார்த்திக்(31). பழம் பெரும் நடிகர் முத்துராமனின் பேரனும், நவரச நாயகன் கார்த்திக் மகன் ஆவார். மணிரத்தினம் இயக்கிய ‘கடல்’ படம் மூலம் சினிமா துறையில் நுழைந்தார். இளம் நடிகரான இவர் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.கவுதம் கார்த்திக் அதிகாலையில் சைக்கிளில் உடற் பயிற்சி செல்வது வழக்கம். நேற்று அதிகாலை 5.30 மணிக்கு பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். டி.டி.கே.சாலையில் செல்லும்போது, பைக்கில் பின் தொடர்ந்து வந்த வழிப்பறி கொள்ளையர்கள் நடிகர் கவுதம் கார்த்திக்கின் விலை உயர்ந்த செல்போனை பறித்து கொண்டு தப்பிச் சென்றனர்.