திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் சர்வதேச எய்ட்ஸ் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எய்ட்ஸ் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன், சுகாதார துணை இணை இயக்குனர், துணை இயக்குனர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றனர். நிகழ்ச்சியின் முடிவில் எச்.ஐ.வி தொற்றால் பாதித்த ஒருவர் திடீரென தனக்கு தானே பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார். அப்போது, உடனே விரைந்து வந்த மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு திட்ட இயக்குநர் டாக்டர் கவுரிசங்கர் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் காப்பாற்றி விசாரித்தனர்.