ஜம்மு எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் இந்திய வீரர் மரணம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச எல்லைகளில் பாகிஸ்தான் ராணுவம் சமீப காலமாக தினமும் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்றும் தாக்குதல் நடத்தியது. பூஞ்ச் மாவட்டம், மெந்தாரில் உள்ள தர்குந்தி எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே நடத்திய தாக்குதலில் சிறியரக வெடிகுண்டுகளும், நவீன துப்பாக்கிகளும் பயன்படுத்தப்பட்டன. இந்திய ராணுவ வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர். எனினும், பாகிஸ்தானின் தாக்குதலில் எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் வீரமரணம் அடைந்தார்.

Related Stories: